Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லக்னோ: ராகுல் நல்ல நடிகர் அவர் அரசியலில் இருந்து வெளியேறி மும்பைக்கு செல்ல வேண்டும் என உ.பி.,பா.ஜ., எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறி உள்ளார்.
உ.பி., மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திரசிங். இவர் எதிர்கட்சிகளை குறித்து செய்யும் விமர்சனங்கள் சர்ச்சைக்குரியதாக அமையும். தற்போது அவர் பல்லியா என்னும் இடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் ஒரு நல்ல நடிகர் . அவர் அரசியலை விட்டு வெளியேறி இந்திய திரை உலகின் சொந்த ஊரான மும்பைக்கு செல்ல வேண்டும். நாங்கள் நாட்டை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். மக்கள் கொரோனாவைரஸ் காலத்தில் எப்படி சமூக இடைவெளி கடைபிடிக்க படுகிறதோ அதே போல் மக்கள் காங்கிரஸ் வாக்குகளை தூர விலக்கி கொள்ள வேண்டும். என கூறினார்.
மேலும் அயோத்தியில் ராம் ஜன்மபூமி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மதுரா மற்றும் வாரணாசியில் உள்ள கோயில்-மசூதி மோதல்களைக் குறிப்பிட்டு, "இதே போன்ற நடவடிக்கை" எடுக்கப்பட வேண்டும் என்றார்.